உன்னதமான மூவரை இழந்து நிற்கும் ஒரு ஊர்
அன்று அனஸ் ஹாஜி பின்னர் ஸவாஹிர் மௌலவி இன்று அஸ்லம் நானா..... சிலரது இழப்புகள் என்றும் மறக்க முடியாத இழப்புகளாக அமையும் இவர்கள் மூவரது இழப்புகளைப் போன்று. இவர்களும் சாதாரண மனிதர்கள்தான். எனினும் உலக மனிதர்களின் மனங்களை வென்ற சங்கையான மனிதர்கள். இறுதியாக எம்மை விட்டுப் போனவர் சகோதரர் அஸ்லம். இவரைப் பற்றி அதிகம் விபரிக்கத் தேவையில்லை. அனைவரும் அறிந்த அற்புதமான மனிதர். அவரது உடல் இன்னும் சில நேரமே எம்மோடு இருக்கும். அந்த சில நிமிடங்களே அவரை நினைத்து அவரது அன்பானவர்கள் அழுவார்கள், அதன் பின்னர் அவரது உறவினர்கள் அழுவார்கள். இறுதியில் ஆங்காங்கே அவர் குறித்து கதைப்பார்கள், சில சம்பவங்களை நினைப்பார்கள். எனினும், இவர்கள் எமக்காக விட்டுச் சென்ற பாடங்கள் பல, அவற்றில் இருந்து கற்க வேண்டியவை பல, எம்மில் வர வேண்டிய மாற்றங்கள் இன்னும் பல.... சில விடயங்களை வெளிப்படையாகக் கூறுகின்றேன் யாரையும் புன்படுத்தவல்ல, புது மனிதராக மாற... பிரதேச வாதத்தில் முன்னிலை வகிக்கும் எமது ஊர் மக்களுக்கு (முட்களுக்கு) மத்தியில் இவர்கள் வாழ்ந்து காட்டினார்கள் எந்தவித வேற...